Friday, March 11, 2011

அவள் கண்கள் இரண்டும்

 
 
நிலவில் இரவா, இரவில் நிலவா
தெரியவில்லை
கருமை அழகா பொன் மேனி அழகா
புரியவில்லை

நிலவினை பெண் என
பார்த்திடும் போது
அவள் கூந்தலின் கருமை
இரவாய் போனதுவோ....

ஒரு நிலவால் என் வாழ்வில்
இரவா தெரியவில்லை
தமிழ் நிலவால் என் உயிருக்கு
ஒளியா புரியவில்லை....

அவள் கண்கள் இரண்டும்
நிலவாய் போனால் கண்
இமைகள் தான் இரவாகும்,
பொன் மகள் என்னை பாராவிட்டால்
என் வாழ்வு முழுதும் இரவாகும்..

By. அனோராஜ்

நீ..மட்டும் போதுமடி

 
 
வெள்ளி மலரே எந்தன் உயிரே
வில்லாய் நீ மாறி காதல்
அம்பை வீசினாய்....உன்
அன்பாலே நான் வாழ்க்கையின்
அர்த்தம் உணர்ந்தேனே...

அன்பே என் நெஞ்சில் எல்லாம்
நீ  வந்த காலின் தடம்
நிலவே நீ வந்தால் போதும்
தடைகள் கூட படியாய் மாறுமடி.

என் கண்ணீர் துடைக்க
கைகள் கேட்டேன் மேல்.தாங்கி
தோழாய் நின்றாய் காதலியே..
என் விழியோரம் வழியும் கண்ணீர் 
உன் கண்ணோடும் வழிகிறதே
உறக்க மறுக்கும் கண்கள் கூட
தாயென உன் மடி தேடுகிறதே....

உயிரே உன் நெஞ்சுக்குள்ளே.
என் மூச்சு உள்ளதடி
பெண்னே உன் கண்ணுக்குள்ளே
என் உயிர் தான் வாழுதடி..
கண்ணே உன் கண்மணிக்குள்ளே
சுத்துதடி என் உலகம்
பெண்னே உன் பொன் விழி தானடி.
எந்தன் பூவுலகம்.....

என்..நெஞ்சோடு..காதலியாய்
நீ..மட்டும் போதுமடி –அன்பே
என் காதல் தானாய் வளருமடி...

By. அனோராஜ்

என் காதல்...!!

காதல் என்றும் புனிதமானது
என்பதை நான் அறிவேன்-----!!
உன்னால் காதல் மடியுமோ
என்று ஏங்குகிறேன்------------!!
 

ஷஜகான் செய்த தப்பினால்
தாஜ்மகால் உருவானது------!!
நான் செய்த தப்பினால் இன்று
கவிதை தானே உருவாகின்றது---!!

வாலிபம் முடியும் முன்னே
என் வாழ்க்கையும் முடிந்ததடி----!!
ஆசைகள் பல இருந்தும்
அவையும் மடிந்ததடி-----------!!

சொல்லி வருவதில்லை காதல்
சொல்ல முடிவதில்லை காதல்
சொல்ல மொழியும் இல்லை---!!
சொன்னாலும் உனக்கு புரியவில்லை
என் காதல்----!!

By. அனோராஜ்